உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக, மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் நடைபெற்ற இந்தியத் தொழில் கூட்டமைப்பு மாநாட்டில் பேசிய அனந்த நாகேஸ்வரன், உலக நாடுகள் பல பொருளாதார பின்னடைவைச் சந்திக்கும் நிலையில், இந்தியா கடந்த ஆண்டில் ஏழு புள்ளி ஏழு சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளதாக தெரிவித்தார்.
உள்கட்டமைப்புக்காக மத்திய அரசு பல லட்சம் கோடிகளை முதலீடு செய்ததே இதற்குக் காரணம் என்றும் அனந்த நாகேஸ்வரன் கூறினார்.
சாலைகள், மின்சாரம் ஆகியவற்றை அமைப்பது போல தண்ணீரையும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பாகக் கருத வேண்டும் என்று தெரிவித்தார். தண்ணீரை இலவசமாகக் கொடுக்கும்போது, அது எல்லையற்றது என நினைத்து மக்கள் அதனை வீணாக்குவதாகவும் கூறினார்.
தண்ணீரைச் சேமிக்க சரியான கட்டணம் வசூலிப்பதே நிரந்தர தீர்வு என்றும் குறிப்பிட்டார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீரின் முக்கியத்துவம் குறித்து திருவள்ளுவர் தெரிவித்திருந்ததையும், தனது உரையில் அனந்த நாகேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
















