டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை, உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பக்தியோர் சைடோவ் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இருவரும் ஆலோசித்தனர். அப்போது பேசிய ஜெய்சங்கர், இரு நாடுகளின் தலைமைகளுக்கு இடையேயான நெருங்கிய தொடர்பால் இருதரப்பு உறவுகளில் நிலையான வேகம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
கட்டுமானம், டிஜிட்டல் தொழில்நுட்பம், எரிசக்தி, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய துறைகளைத் தாண்டி, தற்போது கனிமவளத் துறையிலும் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
தற்போது இரு நாடுகளுக்கு இடையே சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பில் வர்த்தகம் நடைபெற்று வருவதாகவும், இந்த வர்த்தக அளவு மேலும் உயர வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக இருப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
















