சென்னை பெரியமேட்டில் பெண் ஒருவரின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெரியமேடு பகுதியை சேர்ந்த கலைவாணி என்பவர் வழக்கம் போல வீட்டில் இருந்த போது அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த மூன்று மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர்.
இதில் வீட்டின் முன்பகுதி சேதமடைந்த நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். பெட்ரோல் குண்டு வீச்சில் யாருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிப்பதற்காக மூன்று தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
















