உதயநிதி ஆபாச பேச்சு விவகாரம் : சென்னையில் கைது - தஞ்சையில் விடுவிடுப்பு - முழு விவரம்!
Sep 19, 2026, 08:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உதயநிதி ஆபாச பேச்சு விவகாரம் : சென்னையில் கைது – தஞ்சையில் விடுவிடுப்பு – முழு விவரம்!

Manikandan by Manikandan
Aug 4, 2026, 06:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற தஞ்சை போலீசார், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான போலீசார் உதவியுடன் உதயநிதியை கைது செய்தனர். இது குறித்து தகவலறிந்த திமுக தொண்டர்கள் அவரது இல்லம் முன்பு திரண்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போலீசார் உதயநிதியை காவலில் எடுத்து தஞ்சை நோக்கி அழைத்துச் சென்றனர்.

சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில், உதயநிதி கைது செய்யப்பட்டது ஜனநாயக விரோதம் என திமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், உதயநிதி கைது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்தபோது, உதயநிதியை சிறையில் அடைக்கும் எண்ணம் இல்லை என்றும், விசாரணைக்குப் பிறகு காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதி இளந்திரையன், விசாரணைக்குப் பிறகு உதயநிதியை உடனே விடுவிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

தஞ்சை தெற்கு காவல் நிலையத்துக்கு உதயநிதியை அழைத்துச் சென்றால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடும் என கருதிய போலீசார், வழியிலிருந்த செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்கு அவரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

ஆனால், நீதிமன்ற உத்தரவின்படி தன்னை தஞ்சைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் எனக் கூறிய உதயநிதி, செங்கிப்பட்டி காவல் நிலையத்துக்குள் செல்ல மறுத்து சிறிது நேரம் காரிலேயே அமர்ந்திருந்தார். பின்னர் காவல் நிலையத்துக்குள் சென்ற அவரிடம், ஆபாசப் பேச்சு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

மாலை 6.45 மணிக்கு காவல் நிலையத்துக்குள் சென்ற உதயநிதி, இரவு 8.10 மணிக்கு விசாரணை முடிந்து வெளியே வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த தி.மு.க. தொண்டர்கள், அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் திறந்தவெளி காரில் நின்றபடி தொண்டர்களை நோக்கி கையசைத்த அவர், சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.

Tags: Arrestudayanidhitanjoresengipatti
Share
Tweet
SendShare
Previous Post

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

Next Post

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

Related News

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

பயங்கரவாத ஆதரவு காரணமாக தமிழகத்துக்கு பேராபத்து ஏற்படும் – இந்து முன்னணி எச்சரிக்கை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை – அன்புமணி அறிவிப்பு!

டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் நிதியமைச்சர்கள் மாநாடு – மரிய வில்சன் பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies