முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார்.
தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின்போது, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற தஞ்சை போலீசார், சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் தலைமையிலான போலீசார் உதவியுடன் உதயநிதியை கைது செய்தனர். இது குறித்து தகவலறிந்த திமுக தொண்டர்கள் அவரது இல்லம் முன்பு திரண்டனர். நீண்ட நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போலீசார் உதயநிதியை காவலில் எடுத்து தஞ்சை நோக்கி அழைத்துச் சென்றனர்.
















