இந்தியத் தலைமை நீதிபதி உட்பட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 34லிருந்து 38ஆக உயர்த்தும் மசோதா மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் தற்போதைய நிலவரப்படி தலைமை நீதிபதியுடன் சேர்த்து மொத்தம் 34 நீதிபதிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கையை 38ஆக உயர்த்த முடிவு செய்த மத்திய அரசு, சில மாதங்களுக்கு முன் அவசர சட்டத்தை பிறப்பித்தது.
இதற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததன் மூலம், நீதிபதிகளின் எண்ணிக்கை 38ஆக அதிகரிக்கப்பட்டது. அவசர சட்டம் கொண்டு வந்தால் ஆறு மாதங்களுக்குள் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும்.
அதன்படி மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை திருத்த மசோதா – 2026ஐ அறிமுகப்படுத்தினார்.
அவசர சட்டத்திற்கு பதிலாக இந்த புதிய மசோதா கொண்டு வரப்பட்டு மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. பின்னர் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
















