ஆட்சிக்கு வந்தது முதல் விமர்சகர்களை கைது செய்வதிலேயே முதலமைச்சர் விஜய் கவனம் செலுத்தி வருவதாக, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி பிரச்னையில் அரசின் தோல்வியில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் நோக்கிலேயே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
உதயநிதி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதன் மூலம், அவரை தவெக அரசு மிரட்ட முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், தன்னையும், அமைச்சர்களையும், அரசையும் விமர்சிப்பவர்களை கைது செய்வதையே முதலமைச்சர் விஜய் தொடர்ந்து செய்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
நாளை சட்டப்பேரவை கூட உள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் அவையில் பங்கேற்கக் கூடாது என்ற நோக்கத்திலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உண்மை நிலையை அறியாமல் சில அரசியல் தலைவர்கள் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருப்பது வருந்தத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.
உதயநிதி தனது உரையில் ஆபாசமாக எதுவும் பேசவில்லை; யாரையும் குறிப்பிட்டும் பேசவில்லை என்றும் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
மேலும், ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக, முதலமைச்சர் விஜய் ‘ரீல்ஸ் கிரியேட்டர்’ போல செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்துள்ளார்.
ஆணவம் அழிவுக்கு வழிவகுக்கும்; தொடர்ச்சியான ஆணவம் அழிவை விரைவுபடுத்தும் என்றும் தனது அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
















