ஆடிப்பெருக்கையொட்டி காரைக்குடி அருகே உள்ள பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் நடந்த கிடா விருந்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடியில் உள்ள பதினெட்டாம்படி கருப்பர் மற்றும் நீலி அம்மன் கோயிலில் ஆடிப்பெருக்கையொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து, சுவாமிக்கு சந்தனக் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து, கோயில் வளாகத்தில் கிடா விருந்து பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விருந்தில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் ஒரே பந்தியில் அமர்ந்து உணவருந்தினர்.
















