உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை என அரசு தலைமை வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உதயநிதி கைது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை விசாரணைக்கு பின்னர் அவர் விடுவிக்கப்படுவார் என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணைக்கு உதயநிதி முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தார்.
















