தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததை அடுத்து, சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றி கழகம் உருவெடுத்துள்ளது. இதனையடுத்து, பெரும்பான்மை இல்லாததால் காங்கிரஸின் ஆதரவைக் கோரிய நிலையில் காங்கிரஸ் தேசிய தலைமை ஆதரவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, திமுக உடனான கூட்டணியில் காங்கிரஸ் அடிமை போல் இருந்ததாகவும், தற்போது தவெக உடனான கூட்டணியால் விடுதலை கிடைத்தது போலவும் புகைப்படங்களை வைத்து சென்னை சத்திய மூர்த்தி பவனில் காங்கிரஸ் நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
















