தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணையும் தனது தாயாகவும், தங்கையாகவும் பார்ப்பதாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தான் பேசாத விஷயத்தை பேசியதாக பொய் பிரச்சாரம் செய்யப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3,000 போலீசார் பாதுகாப்புடன் தீவிரவாதியை போல அழைத்து செல்லப்பட்டதாகவும், தான் பேசியதை ஆராயாமல் ஒருசில தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது வருத்தம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
“கரூர் சம்பவத்தின்போது புறமுதுகு காட்டி ஓடியவர்தான் இன்றைய முதல்வர் விஜய் என்றும், பொய் வழக்கு போட்டு தவெக அரசு அச்சுறுத்த பார்ப்பதாகவும் கூறினார்.
இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எல்லாம் பயப்படும் ஆள் இல்லை என்றும், இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை என்றும் உதயநிதி விளக்கம் அளித்தார்.
















