நெல்லையில் 5ம் வகுப்பு மாணவனை சக மாணவனின் பெற்றோர் தாக்கியதாக குற்றச்சாட்டில் தாய் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தருவையை சேர்ந்த இரண்டு மாணவர்கள் அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கிடையே பள்ளியில் சிறிய சண்டை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஒரு மாணவன் தமது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் தந்தை ஜோதி கிளி மற்றும் தாயார் இசக்கி ராணி, சக மாணவனின் வீட்டுக்கு சென்று சிறுவன் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கினர். இதில் மாணவன் படுகாயமடைந்தார்.
இது தொடர்பான நிகழ்வு தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தியாக ஒளிப்பரப்பட்டது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், மாணவனை தாக்கிய சக மாணவனின் தாயை கைது செய்தனர். தலைமறைவாகியுள்ள ஜோதி கிளியை போலீசார் தேடி வருகின்றனர்.