இந்தி மொழி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டு இன்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், அனைத்து இந்திய மொழிகளும் பெருமையும் பாரம்பரியமும் கொண்டது என தெரிவித்தார். மொழிகளை வளப்படுத்தாமல் நாடு முன்னேற முடியாது எனக்கூறிய அவர், அதிகாரப்பூர்வ மொழியான இந்தி அனைத்து இந்திய மொழிகளுடனும் பிரிக்க முடியாத உறவைக் கொண்டுள்ளது என குறிப்பிட்டார்.
அனைத்து இந்திய மொழிகளையும் ஒன்றிணைத்துக் கொண்டு செல்லவும், மேம்பட்ட இந்தியாவின் வளர்ச்சியை நிறைவேற்றவும் இந்தி மொழி தொடர்ந்து பங்களிக்கும் என கூறினார்.