ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் பிரதமரின் வீடுகட்டும் திட்ட பயனாளிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
புவனேஸ்வரில் பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனடைந்தவர்களின் வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, அங்கு பாயாசம் உட்கொண்டார். அப்போது ஒடிசா முதலமைச்சர் மோகன் சரண் மாஜியும் உடனிருந்தார். முன்னதாக பாரம்பரிய மேளதாளத்துடன் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தின்கீழ் பயனடைந்த பெண்கள் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பெண்களின் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.