தென்மேற்கு பருவமழையில் ஏற்பட்ட தொய்வு காரணத்தால் தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
அவரோடு நமது செய்தியாளர் வீரகுமார் நடத்திய கலந்துரையாடலின் போது அவர் கூறியதாவது:
தென்மேற்கு பருவமழையில் ஏற்பட்ட தொய்வு தான் கடும் வெப்பத்திற்கு காரணம் என்றும், தமிழ்நாட்டில் அடுத்த 10 நாட்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரித்தார்.
அடுத்த 2 வாரங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயர வாய்ப்பு உள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்கு பின் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
அக். 3-வது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், சென்னையில் அடுத்த 3 தினங்களில் வெப்பம் படிப்படியாக குறையும் எனறும் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.