திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பகுதியில் 7 ஆயிரம் அடி உயரத்தில் யோகாசனங்கள் செய்து மாணவர்கள் அசத்தினர்.
புலியார் வனகிராமத்தில் தனியார் யோகா மையம் நடத்திய நிகழ்வில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அவர்கள், தடாசனம், திரிகோண ஆசனம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஆசனங்களை 500 விநாடிகளில் செய்து அசத்தினர்.