ஆந்திராவில் முந்தைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, மீன் எண்ணெய் கலக்கப்பட்டது ஆய்வில் உறுதியாகி உள்ளது.
திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டினார்.
ஆந்திராவில் தாம் ஆட்சிக்கு வந்தபின் தான், சுத்தமான நெய்யில் லட்டு தயாரிக்கப்பட்டு கோயிலின் புனிதம் காக்கப்படுவதாகவும் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
இதற்கு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்தது.
இதனிடையே, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் தயாரிக்கப்பட்ட லட்டுகளின் மாதிரி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில், லட்டில் மாட்டிறைச்சிக் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் பாமாயில் கலக்கப்பட்டது உறுதியானது. இந்தத் தகவல் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் இந்துக்களின் உணர்வு புண்படுத்தப்பட்டதாக அரசியல் கட்சிகள் விமர்சித்துள்ளன.