ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாவின் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழலை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக பூபிந்தர் சிங் ஹூடாவும், பா.ஜ.க சார்பாக நயப் சிங் சைனியும் முதல்வர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டிருப்பதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் குருகிராமில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், பூபிந்தர் சிங் ஹூடா மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர தயாராக வேண்டும் என கூறினார். மேலும், நயாப் சிங் சைனியின் தலைமையில் ஒரு நல்ல அரசாங்கத்தை உருவாக்க பாஜக பாடுபடுவதாகவும் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார்.