பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர்.
கைபர் பக்துன்கவா மாகாணத்துக்கு உள்பட்ட மிஸ்தா கிராமத்தில் சோதனைச் சாவடியைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 6 பாதுகாப்பு படை வீரர்கள் பலியான நிலையில், மேலும் 11 பேர் காயமடைந்தனர். தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.