சா 'தீ' யால் சீரழியும் நெல்லை - இளம் குற்றவாளிகளாக மாறும் மாணவர்கள்!
Aug 5, 2026, 01:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சா ‘தீ’ யால் சீரழியும் நெல்லை – இளம் குற்றவாளிகளாக மாறும் மாணவர்கள்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், பள்ளி கல்லூரிகளில் அதிகரிக்கும் சாதிய ரீதியிலான மோதல்கள் என சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நிறைந்த பகுதியாக திகழ்கிறது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை பகுதி. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என அழைக்கப்பட்ட பகுதி சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் புகழிடமாக மாறிவரும் நெல்லை மாவட்டம் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

ஏராளமான கல்லூரிகள், எண்ணிலடங்கா கல்வி நிறுவனங்கள் என தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என சொல்லும் அளவிற்கு இருந்த நெல்லை பாளையங்கோட்டை பகுதி, தற்போது கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், சாதிய மோதல் என ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளின் புகழிடமாக மாறிவருகிறது.

கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சாதிய வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சக மாணவர்களாலே தாக்குதலுக்குள்ளான மாணவர் சின்னதுரையில் தொடங்கி, கடந்த சில தினங்களுக்கு முன் புத்தகப் பையில் அரிவாளை கொண்டு வந்த மாணவன் வரை அடுத்தடுத்து அரங்கேறக்கூடிய நிகழ்வுகள் பதபதப்பை ஏற்படுத்துகின்றன.

அதிகளவிலான கல்வி நிறுவனங்களை உள்ளடக்கிய பாளையங்கோட்டையில் தொடர்ந்து நடைபெறக்கூடிய சாதி ரீதியிலான மோதல் சம்பவங்கள் இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில் அமைந்துள்ளது.

பாளையங்கோட்டை பள்ளி ஒன்றில் மாணவரை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய ஆசிரியர்கள், கல்லூரி மாணவியை மது அருந்த அழைத்த பேராசிரியர்கள் என மாணவர்களுக்கு நல்வழியை கற்றுத்தர வேண்டிய ஆசிரியர்களே தவறான பாதைக்கு அழைக்கும் நிகழ்வுகள், பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

பல வல்லுநர்கள், அறிஞர்கள், அரசியல் தலைவர்களை உருவாக்கிய நெல்லை மாவட்டம் தற்போது ஜாதி ரீதியிலான மோதல் சம்பவங்களை ஊக்குவித்து வருவது வேதனைக்குரியது என்கின்றனர் அம்மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள்

பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கிடையே நிலவும் மோதல் சம்பவங்களில் அரசியல் கட்சியினரின் தலையீடு அதிகளவில் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. பள்ளிகளுக்குள் அதிகரிக்கும் சாதிய, மோதல்களை அடியோடு தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே வருங்கால தலைமுறையை சிறந்த தலைமுறையாக உருவாக்க ஒரே தீர்வாக அமையும்.

Tags: palayamkottaiOxford of South Indiaeducational institutestirunelvelilaw and order
ShareTweetSendShare
Previous Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சீசிங் ராஜா – காவல்துறை சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்!

Next Post

பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாத தாக்குதல் – பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் பலி!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies