சிறுவனை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் பின்னணி பாடகர் மனோவின் மகன்களுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னணி பாடகர் மனோவின் மகன்களான ரபீக் மற்றும் ஜாகீர் ஆகியோர் மதுபோதையில் மதுரவாயலில் சிறுவன் உள்பட 2 பேரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக மனோ மகன்கள் மீது வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதையடுத்து மனோ மகன்கள் தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில், இருவரும் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனா். இதை விசாரித்த நீதிபதி, இருவரும் 30 நாட்கள் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.