உதகையில் உள்ள தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் கணக்கில் வராத 4 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
உதகை தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்க அலுவலகத்தில் பணிபுரியும் இரு பெண்கள், அங்குள்ள மகளிர் குழுக்களிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து தகவலின் பேரில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர், கணக்கில் வராத 4 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.