ஜார்கண்டில் ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நவம்பரில் நடைபெற உள்ளது. இதையொட்டி, சாத்ரா பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்நாத் சிங், ஜார்கண்டை ஆண்ட பாஜக முதலமைச்சர்களான பாபுலால் மராண்டி, அர்ஜுன் முண்டா மற்றும் ரகுபர் தாஸ் ஆகியோர் ஒருபோதும் ஊழல் குற்றச்சாட்டில் சிறை சென்றதில்லை என தெரிவித்தார்.
ஊழல் கறைபடிந்த தலைவரை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று கூறிய அவர், ஹேமந்த் சோரனை ஆட்சியிலிருந்து அகற்றும் நேரம் வந்துவிட்டதாக சூளுரைத்தார்.