மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வசிக்கும் காணி பழங்குடியின மக்களுக்கு புதிய கான்கிரீட் வீடு கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு காணி பழங்குடியின மக்கள் நன்றி தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை காரையாறு வனப்பகுதியில் உள்ள அகஸ்தியர் நகர் காணிக்குடியிருப்பு, சின்னமைலார், பெரியமைலார், சேர்வலாறு காணிக்குடியிருப்பு மற்றும் இஞ்சிக்குழி பகுதிகளில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2006 வன உரிமை சட்டத்தின் படி அப்பகுதியில் வசிக்கும் 160 குடும்பத்தை சேர்ந்த காணி பழங்குடி மக்களுக்கு கடந்த 2022-ம் ஆண்டு பட்டா வழங்கப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசின் தொல் பழங்குடியின நிதியில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வீடு கட்ட நிதி ஒதுக்கிய மத்திய அரசுக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.