ரூ. 5000 கோடி மிக்கட்டண பாக்கி வைத்துள்ள தமிழக உள்ளாட்சி அமைப்புகள் - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 5000 கோடி மிக்கட்டண பாக்கி வைத்துள்ள தமிழக உள்ளாட்சி அமைப்புகள் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய மின் கட்டண நிலுவைத் தொகை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எந்தெந்த மாநகராட்சி, எவ்வளவு நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ளது  என்பதை  விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றிற்கான மின் பயன்பாடு கணக்கெடுத்த நாளில் இருந்து 60 நாள்கள் வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மின்வாரியம் வழங்கியுள்ளது.

ஒரு மாத மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் குடியிருப்புவாசிகளின் மின் இணைப்பை துண்டிக்கும் மின்வாரியம், 5 ஆயிரத்தி 69 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் பாக்கி வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனில் மின்வாரியம் சிக்கித் தவிப்பதாக கூறப்படும் நிலையில், அரசுத்துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக மின்வாரியத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மட்டுமே சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணத்தொகை செலுத்த வேண்டியிருப்பது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக ஈரோடு 950 கோடி ரூபாயும் சென்னை 936 கோடி ரூபாயும் மின்கட்டண பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி 857 கோடி ரூபாயும், வேலூர் 560 கோடி ரூபாயும், திருநெல்வேலி 511 கோடி ரூபாயும் நிலுவையில் வைத்துள்ளன.

மதுரை 483 கோடி ரூபாயும், விழுப்புரம் 402 கோடி ரூபாயும், கோயமுத்தூர் 370 கோடி ரூபாயும் மின் கட்டண பாக்கி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏழை,எளிய நடுத்தர குடும்பத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் கீழ் இயங்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் மின்வாரியம் காட்டியிருக்கும் சலுகை பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் வரி, சொத்துவரி, சாலைவரி என பல்வேறு வரிகளை வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த மறுப்பதாலும், அதனை முறையாக கேட்டுப்பெறாத மின்வாரியத்தினாலும் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு, மத்திய அரசிடம் பெற வேண்டிய மானியத் தொகையையும் பெற முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

Tags: Tamil Nadu local bodieselectricity billsarrearstamilnaduelectricity board
ShareTweetSendShare
Previous Post

இளையான்குடி அருகே காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies