ரூ. 5000 கோடி மிக்கட்டண பாக்கி வைத்துள்ள தமிழக உள்ளாட்சி அமைப்புகள் - சிறப்பு கட்டுரை!
Sep 9, 2025, 06:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 5000 கோடி மிக்கட்டண பாக்கி வைத்துள்ள தமிழக உள்ளாட்சி அமைப்புகள் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியத்திற்கு கட்ட வேண்டிய மின் கட்டண நிலுவைத் தொகை ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கோடி ரூபாயை தாண்டியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. எந்தெந்த மாநகராட்சி, எவ்வளவு நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ளது  என்பதை  விரிவாக பார்க்கலாம்.

தமிழகத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவைகளை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் விநியோகம், தெருவிளக்குகள் போன்ற மக்களுக்கான சேவைப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றிற்கான மின் பயன்பாடு கணக்கெடுத்த நாளில் இருந்து 60 நாள்கள் வரை மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை மின்வாரியம் வழங்கியுள்ளது.

ஒரு மாத மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் குடியிருப்புவாசிகளின் மின் இணைப்பை துண்டிக்கும் மின்வாரியம், 5 ஆயிரத்தி 69 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணம் பாக்கி வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

2023 ஆம் ஆண்டு நிலவரப்படி ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனில் மின்வாரியம் சிக்கித் தவிப்பதாக கூறப்படும் நிலையில், அரசுத்துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் உரிய நேரத்தில் மின் கட்டணத்தை செலுத்தாதன் காரணமாக மின்வாரியத்திற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மட்டுமே சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவிற்கு மின் கட்டணத்தொகை செலுத்த வேண்டியிருப்பது தெரியவந்துள்ளது.

அதிகபட்சமாக ஈரோடு 950 கோடி ரூபாயும் சென்னை 936 கோடி ரூபாயும் மின்கட்டண பாக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. திருச்சி 857 கோடி ரூபாயும், வேலூர் 560 கோடி ரூபாயும், திருநெல்வேலி 511 கோடி ரூபாயும் நிலுவையில் வைத்துள்ளன.

மதுரை 483 கோடி ரூபாயும், விழுப்புரம் 402 கோடி ரூபாயும், கோயமுத்தூர் 370 கோடி ரூபாயும் மின் கட்டண பாக்கி வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்பு மூன்று முறை மின்கட்டணம் உயர்த்தப்பட்டதால் ஏழை,எளிய நடுத்தர குடும்பத்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் கீழ் இயங்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் மின்வாரியம் காட்டியிருக்கும் சலுகை பொதுமக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிநீர் வரி, சொத்துவரி, சாலைவரி என பல்வேறு வரிகளை வசூலிக்கும் உள்ளாட்சி அமைப்புகள், மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை செலுத்த மறுப்பதாலும், அதனை முறையாக கேட்டுப்பெறாத மின்வாரியத்தினாலும் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதோடு, மத்திய அரசிடம் பெற வேண்டிய மானியத் தொகையையும் பெற முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.

Tags: electricity billsarrearstamilnaduelectricity boardTamil Nadu local bodies
ShareTweetSendShare
Previous Post

இளையான்குடி அருகே காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

Next Post

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான ரவடி சீசிங் ராஜா என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

Related News

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies