திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் குட்கா பாக்கெட் கவர் கிடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆந்திர மாநிலம், கம்மம் மாவட்டம் கொல்லகூடேம் கிராமத்தை சேர்ந்த பத்மா என்பவர் கடந்த 19ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழிபாடு நடத்திய பின் லட்டு பிரசாதம் வாங்கி சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் வாங்கி சென்ற லட்டு ஒன்றில் குட்கா பாக்கெட் இருந்ததாக அவருடைய குடும்பத்தினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
திருப்பதி மலையில் புகையிலை பொருட்கள் விற்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், லட்டு பிரசாதத்தில் குட்கா கவர் வந்தது எப்படி என பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருப்பதி லட்டு கலப்பட நெய் விவகாரம் காரணமாக அரசியல்
ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த யாராவது சதி செய்துள்ளார்களா என்ற சந்தேகம் தேவஸ்தான வட்டாரத்தில் எழுந்துள்ளது.