சென்னை மடிப்பாக்கத்தில் அதிக கட்டணம் வசூலிப்பதாக கூறி தனியார் பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈச்சங்காடு – கிண்டி சாலையில் ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் திடீரென கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஒன்றாம் வகுப்புக்கு 4 ஆயிரமாக இருந்த கட்டணம் தற்போது 9 அயிரத்து 500 ரூபாயாகவும், 5-ஆம் வகுப்புக்கு 4 ஆயிரத்து 500 ஆக இருந்த கட்டணம், 11 ஆயிரத்து 500-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது, இதனையடுத்து பள்ளி முன்பு திரண்ட பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மேடவாக்கம்- கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.