கொலையாளி யார்? : பெங்களூரை அதிரவைத்த ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு!
Sep 6, 2025, 03:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

கொலையாளி யார்? : பெங்களூரை அதிரவைத்த ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு!

Web Desk by Web Desk
Sep 25, 2024, 07:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெங்களூருவில் கொலை செய்யப்பட்டு , துண்டு துண்டாக வெட்டப்பட்டு, குளிர்சாதன பெட்டியில் இளம்பெண் வைக்கப்பட்டிருந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியை இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரத்தில் ஒரு படுக்கையறை அடுக்குமாடி குடியிருப்பில், தனது கணவரைப் பிரிந்து தனியாக 29 வயதான மகாலக்ஷ்மி என்ற பெண் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் புகார் அளித்தனர்.

இதனையடுத்து, மகாலக்ஷ்மி தங்கியிருந்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த மகாலட்சுமியின் தாயார் மீனா ராணாவுக்கும்,சகோதரிக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்குள் புழுக்கள் நிறைந்த நிலையில் மகாலக்ஷ்மியின் உடல் 59 துண்டுகளாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. கொலையான மகாலட்சுமிக்கும், ஹேமந்த் என்பவருக்கும் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆன நிலையில் நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 9 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையே, தனது மனைவி மகாலட்சுமிக்கு முடிதிருத்தும் கடையில் வெளி பார்க்கும் உத்தர காண்ட்டை சேர்ந்த அஷ்ரஃப் என்பவருடன் உடன் பழக்கம் இருந்ததாகவும் , மகாலக்ஷ்மி கொலையின் பின்னணியில் அவர் இருக்கலாம் என்றும் ஹேமந்த் தாஸ் விசாரணையில் தன் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.

மேலும் , கடந்த சில மாதங்களுக்கு முன் அஷ்ரஃப் மீது பெங்களூரு காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அந்த புகாரின் அடிப்படையில்,அஷ்ரஃப்பை பெங்களூரு வரக்கூடாது என்று காவல் துறையினர் உத்தரவிட்டதாகவும், அதன் பின் அஷ்ரஃப் எங்கு சென்றார் என்று தமக்கு தெரியாது என்றும் விசாரணையில் ஹேமந்த் தெரிவித்திருக்கிறார்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஒடிசாவைச் சேர்ந்த முக்கிய நபர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும், தற்போது கொலையாளி மேற்கு வங்கத்தில் மறைந்திருப்பதாக சந்தேகப்படுவதாகவும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க பல புலனாய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், சில குழுக்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அனுப்பப்பட்டுள்ளதாகவும் பெங்களூரு காவல் துறை ஆணையர் தயானந்தா தெரிவித்திருக்கிறார்.

மகாலட்சுமியின் கொடூரக் கொலைக்கு அவரது குடும்பத்தினர் நியாயம் கேட்டு கோரிக்கை வைத்துள்ள நிலையில், கொலையில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யுமாறு பெங்களூரு காவல்துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் முழுமையான மற்றும் காலக்கெடுவுக்கான விசாரணையை உறுதிப்படுத்துமாறும், மூன்று நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறும், பெங்களூரு காவல் துறையைக் தேசிய மகளிரை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மகாலக்ஷ்மி கொலை தொடர்பாககாவல் துறையினர் பல தகவல்களை சேகரித்துள்ளதாகவும், அவற்றை தற்போது வெளியிட முடியாது என்று கூறியுள்ள கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, குற்றம் சாட்டப்பட்டவர்களை விரைவில் பிடிப்போம் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கூறிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, பெங்களூருவில் பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்கனவே நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகவும், பெண்கள் அதிகம் செல்லும் இடங்களில் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த சூழலில், அஷ்ரஃப், மகாலட்சுமியைக் கொடூரமாகக் கொன்றதன் மூலம் சித்தராமையா தலைமையிலான ஆட்சியில் கன்னடர்கள் பாதுகாப்பாக இல்லை என்பதை தெளிவாக நினைவூட்டுவதாக கர்நாடக பாஜக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Tags: Who is the killer? : Fridge murder case that shook Bangalore!Bengaluru news
ShareTweetSendShare
Previous Post

வீட்டின் முன் போலீசாரை நிறுத்துவதும் சட்டவிரோத காவல்தான்! : சென்னை உயர்நீதிமன்றம்

Next Post

கிண்டி ரேஸ் கிளப் – நீர்நிலையா ? பூங்காவா?

Related News

எதிர்கால போருக்கு இந்தியா ரெடி : வெகு ஜோராக நடக்கும் நவீன தளவாட உற்பத்தி!

”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : யாரும் கட்டளையிட முடியாது – நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

பிரதமர் பயணத்தால் ஒப்பந்தம் கையெழுத்து : மணிப்பூரில் முடிவுக்கு வருகிறது இனமோதல்!

வர்த்தக பிரச்னைகளில் அமெரிக்க தரப்புடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம் : வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்திய உறவை சீனாவிடம் இழந்து விட்டோம் : அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

உத்தரப்பிரதேசம் : ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி ஊரையே ஏமாற்றிய நபர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

கைவிட்ட சீனா அதிர்ச்சியில் பாகிஸ்தான் – கேள்விக்குறியான கராச்சி-பெஷாவர் திட்டம்?

ரஷ்யாவுக்கு ட்ரம்ப் ஆதரவு? : நேட்டோவை கை கழுவ திட்டம் – சிக்கலில் ஐரோப்பிய பாதுகாப்பு!

தத்தளிக்கும் தொழில் நிறுவனங்கள் : மின் கட்டணத்தை குறைக்குமா தமிழக அரசு?

பயிற்சியாளருக்கு குருதட்சணை : பாண்ட்யா சகோதரர்களின் கருணை உள்ளம்…!

அடிப்படை வசதி எங்கே? : துயில்கொள்ளும் மாநகராட்சி – தீராத துயரத்தில் பயணிகள்!

மந்த கதியில் பொருநை அரசு அருங்காட்சியக பணிகள் : துரித நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை!

டெண்டரில் மோசடி – தமிழக அரசுக்கு ரூ.90 கோடி இழப்பு!

தஞ்சை : பெட்ரோல் குண்டு வீசி பேரூராட்சி தலைவரை கொல்ல முயற்சி!

வேதனையில் வாடும் விவசாயிகள் : உழவர் சந்தைகளுக்கு வெளியே சட்டவிரோதமாக செயல்படும் கடைகள்!

பாமக நிர்வாகியை கொலை செய்ய முயற்சி : குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies