கிண்டி ரேஸ் கிளப் - நீர்நிலையா ? பூங்காவா?
Sep 13, 2026, 01:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிண்டி ரேஸ் கிளப் – நீர்நிலையா ? பூங்காவா?

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 08:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இன்றைய Behind the news பகுதியில் பார்க்கலாம்…!

சென்னையில் வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 160 ஏக்கர் நிலம் 1945ம் ஆண்டு கிண்டி ரேஸ்கிளப்புக்கு 99 ஆண்டு காலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. குத்தகை காலம் முடிவடையும் முன்பே, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாக கூறி குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, அந்நிலத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்திருப்பதாக அரசாணை பிறப்பித்துள்ளது.

பிற மாநகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் தனி மனிதருக்கான பசுமை நிலப்பகுதி மிகக் குறைவாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டு மற்றும் திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்தே சென்னையின் பரப்பளவில் 6.7 சதவிகிதம் மட்டுமே பசுமை வெளியாக உள்ளது.

சென்னையின் பசுமைப் பகுதியை உருவாக்கும் நோக்கிலும், அதிகரிக்கும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் அதிகளவிலான பசுமை வெளிகளை சென்னையில் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களோட உடல்நலன், உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் போதுமான இடங்களை உருவாக்க முடிவெடுத்த தமிழக அரசு, சென்னை கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தை தோட்டக்கலைத்துறை மூலம் பூங்காவாகவும், பசுமை வெளியாகவும் மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், வேளச்சேரி ஏரிகள் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் பூங்காவிற்கு பதிலாக நீர்நிலையுடன் கூடிய பூங்காவை உருவாக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் போதும், ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என மீண்டும் ஆலோசனை வழங்கியது.

இது தொடர்பாக பிறதுறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்த பசுமைத் தீர்ப்பாயம், வெள்ளத்தால் ஒருபுறமும், வறட்சியால் ஒருபுறமும் பாதிக்கப்படும் சென்னையில் புதிய பசுமை பூங்காவை உருவாக்குவதை விட நீர்நிலை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த ஆலோசனைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சென்னையில் ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளுக்கு உயிர் கொடுப்பதும்,, புதிய நீர்நிலைகளை உருவாக்குவதும் மிக அவசியம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் சென்னையில் இருந்த நீர்நிலைகளில் பாதியளவு கூட தற்போது இல்லாததன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை, புயல், வெள்ளத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

பெருவெள்ள காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிக்க உதவுவதோடு, கோடைக் காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் பயன்படும் என்பதால் கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலை அமைப்பதே சரியானதாக இருக்கும் என பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

Tags: CHENNAI NEWSKindy Race Club - Watershed ? A park?
Share
Tweet
SendShare
Previous Post

கொலையாளி யார்? : பெங்களூரை அதிரவைத்த ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு!

Next Post

திருப்பதி லட்டு விவகாரம் – ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் காவல்நிலையத்தில் புகார்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies