கிண்டி ரேஸ் கிளப் - நீர்நிலையா ? பூங்காவா?
Jul 29, 2026, 06:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கிண்டி ரேஸ் கிளப் – நீர்நிலையா ? பூங்காவா?

Murugesan M by Murugesan M
Sep 25, 2024, 08:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து இன்றைய Behind the news பகுதியில் பார்க்கலாம்…!

சென்னையில் வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் உள்ள 160 ஏக்கர் நிலம் 1945ம் ஆண்டு கிண்டி ரேஸ்கிளப்புக்கு 99 ஆண்டு காலம் குத்தகைக்கு வழங்கப்பட்டது. குத்தகை காலம் முடிவடையும் முன்பே, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தேவைப்படுவதாக கூறி குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, அந்நிலத்தில் பூங்கா அமைக்க முடிவு செய்திருப்பதாக அரசாணை பிறப்பித்துள்ளது.

பிற மாநகரங்களை ஒப்பிடும் போது சென்னையில் தனி மனிதருக்கான பசுமை நிலப்பகுதி மிகக் குறைவாக உள்ளதாக ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டு மற்றும் திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்தே சென்னையின் பரப்பளவில் 6.7 சதவிகிதம் மட்டுமே பசுமை வெளியாக உள்ளது.

சென்னையின் பசுமைப் பகுதியை உருவாக்கும் நோக்கிலும், அதிகரிக்கும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டும் அதிகளவிலான பசுமை வெளிகளை சென்னையில் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பொதுமக்களோட உடல்நலன், உடற்பயிற்சி மற்றும் பொழுதுபோக்கிற்காகவும் போதுமான இடங்களை உருவாக்க முடிவெடுத்த தமிழக அரசு, சென்னை கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தை தோட்டக்கலைத்துறை மூலம் பூங்காவாகவும், பசுமை வெளியாகவும் மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த நிலையில், வேளச்சேரி ஏரிகள் பாதுகாப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் பூங்காவிற்கு பதிலாக நீர்நிலையுடன் கூடிய பூங்காவை உருவாக்கலாம் என ஆலோசனை கூறியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விசாரணையின் போதும், ரேஸ் கிளப் நிலத்தை புதிய நீர்நிலையாக மாற்றலாம் என மீண்டும் ஆலோசனை வழங்கியது.

இது தொடர்பாக பிறதுறை செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்த பசுமைத் தீர்ப்பாயம், வெள்ளத்தால் ஒருபுறமும், வறட்சியால் ஒருபுறமும் பாதிக்கப்படும் சென்னையில் புதிய பசுமை பூங்காவை உருவாக்குவதை விட நீர்நிலை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த ஆலோசனைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சென்னையில் ஏற்கனவே இருக்கும் நீர்நிலைகளுக்கு உயிர் கொடுப்பதும்,, புதிய நீர்நிலைகளை உருவாக்குவதும் மிக அவசியம் என தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் சென்னையில் இருந்த நீர்நிலைகளில் பாதியளவு கூட தற்போது இல்லாததன் விளைவாக, ஒவ்வொரு ஆண்டும் பருவமழை, புயல், வெள்ளத்தின் போது பல்லாயிரக்கணக்கான பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

பெருவெள்ள காலங்களில் வீணாகும் மழைநீரை சேமிக்க உதவுவதோடு, கோடைக் காலங்களில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் பயன்படும் என்பதால் கிண்டி ரேஸ் கிளப்பில் புதிய நீர்நிலை அமைப்பதே சரியானதாக இருக்கும் என பொதுமக்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

கிண்டி ரேஸ் கிளப்பில் பூங்கா அமைக்கப்படுமா ? அல்லது பசுமை தீர்ப்பாயத்தின் ஆலோசனையை ஏற்று புதிய நீர்நிலை உருவாக்கப்படுமா ? என்ற அடுத்தடுத்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தமிழக அரசுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது.

Tags: CHENNAI NEWSKindy Race Club - Watershed ? A park?
ShareTweetSendShare
Previous Post

கொலையாளி யார்? : பெங்களூரை அதிரவைத்த ஃப்ரிட்ஜ் கொலை வழக்கு!

Next Post

திருப்பதி லட்டு விவகாரம் – ஏ.ஆர். டெய்ரி நிறுவனம் மீது தேவஸ்தானம் காவல்நிலையத்தில் புகார்!

Related News

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies