ரஷ்யா உடனான போரை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்த முடியாது என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அமைதியை ஏற்படுத்துவதற்கான தமது செயல்திட்டத்துக்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஆனால், சில நாடுகள் அந்த திட்டத்துக்கு மாறான சில திட்டங்களை பரிந்துரைப்பதாகவும் கூறியுள்ளார்.
மற்ற நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை ஒவ்வொரு நாடும் மதிக்க வேண்டும் என்ற ஐ.நா. பிரகடனத்தை ரஷ்யா பின்பற்றச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.