ரஷ்ய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினால் அணுகுண்டுகளை வீசுவோம் என உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்யாவின் உள் நகரங்கள் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேட்டோ கூட்டமைப்பில் சேர முயன்ற உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில், குரூஸ் ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் டிரோன் தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகிறது என்ற உறுதியான தகவல்கள் கிடைத்தால் ரஷ்யா அணு குண்டு வீசும் என புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.