செந்தில் பாலாஜிக்கு ஜாமின் : வழக்கின் முழு விவரம் - சிறப்பு கட்டுரை!
Aug 18, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் : வழக்கின் முழு விவரம் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு கடந்து வந்தபாதையை சற்று விரிவாக பார்க்கலாம்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தமிழக அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அமைச்சராக பொறுப்பேற்றார்.

2023-ம் ஆண்டு செந்தில்பாலாஜிக்கு வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

2011-2016 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவுசெய்த வழக்கு சென்னை எம்பி, எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

செந்தில்பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செந்தில்பாலாஜியின் இலாக்காக்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமி ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் இலாக்கா இல்லாத அமைச்சராக அவர் தொடர்ந்தார்.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்ததார்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவில் முடிவு எட்டப்படும் வரை, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சாட்சி விசாரணை நடந்து விடக்கூடாது என்பதற்காக செந்தில்பாலாஜி விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்தார்.

சிறப்பு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அமலாக்கதுறை வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி மனுக்கள் மேல் மனுக்களை தாக்கல் செய்தார்.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும், ஜாமீன் கோரியும் சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றம் இதுவரை 59 முறை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்தது.

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Chennaisupreme courtsenthi balaji bailformer minster senthi balaji
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அணுகுண்டு வீசுவோம் – அதிபர் புதின் எச்சரிக்கை!

Next Post

இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பேரழிவின் விளிம்பில் லெபனான் – சிறப்பு கட்டுரை!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies