செந்தில் பாலாஜிக்கு ஜாமின் : வழக்கின் முழு விவரம் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் : வழக்கின் முழு விவரம் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில்பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் செந்தில்பாலாஜி வழக்கு கடந்து வந்தபாதையை சற்று விரிவாக பார்க்கலாம்.

2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தமிழக அரசின் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அமைச்சராக பொறுப்பேற்றார்.

2023-ம் ஆண்டு செந்தில்பாலாஜிக்கு வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

2011-2016 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் 3 வழக்குகளை பதிவு செய்தனர்.

மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பதிவுசெய்த வழக்கு சென்னை எம்பி, எம் எல் ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

செந்தில்பாலாஜியை கைது செய்த நிலையில், அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

செந்தில்பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில்பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

செந்தில்பாலாஜியின் இலாக்காக்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துச்சாமி ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் இலாக்கா இல்லாத அமைச்சராக அவர் தொடர்ந்தார்.

பின்னர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்தார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

தம் மீதான குற்றச்சாட்டுக்கள் அரசியல் காழ்புணர்ச்சியால் தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய விரும்புவதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்ததார்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவில் முடிவு எட்டப்படும் வரை, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சாட்சி விசாரணை நடந்து விடக்கூடாது என்பதற்காக செந்தில்பாலாஜி விசாரணையை தாமதப்படுத்த முயற்சி செய்தார்.

சிறப்பு நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அமலாக்கதுறை வழக்கில் தன்னை விடுவிக்க வேண்டும் என செந்தில்பாலாஜி மனுக்கள் மேல் மனுக்களை தாக்கல் செய்தார்.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரியும், ஜாமீன் கோரியும் சென்னை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டன.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றம் இதுவரை 59 முறை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்தது.

471 நாட்கள் சிறை வாசத்திற்கு பின் செந்தில்பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: former minster senthi balajiChennaisupreme courtsenthi balaji bail
ShareTweetSendShare
Previous Post

ரஷ்ய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தினால் அணுகுண்டு வீசுவோம் – அதிபர் புதின் எச்சரிக்கை!

Next Post

இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பேரழிவின் விளிம்பில் லெபனான் – சிறப்பு கட்டுரை!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies