திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பான வழக்கில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில், காணொலி காட்சி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜரானார்.
அப்போது, சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஆனால், செந்தில் பாலாஜி நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்ட உத்தரவு இன்னும் தமக்கு கிடைக்கவில்லை எனவும், உச்சநீதிமன்ற உத்தரவு நகல் கிடைத்த பிறகு இதில் முடிவு எடுப்பதாகவும் நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்தார். இதனையடுத்து, இந்த வழக்கில் சாட்சி விசாரணை வரும் 30 -ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.