முன்னாள் அமைச்சர் கல்லூரி வளாகத்தில் வெடித்து சிதறும் கற்கள் - உயிர் பயத்தில் மக்கள்!
Mar 15, 2026, 03:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முன்னாள் அமைச்சர் கல்லூரி வளாகத்தில் வெடித்து சிதறும் கற்கள் – உயிர் பயத்தில் மக்கள்!

Murugesan M by Murugesan M
Sep 27, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் அமைச்சர் ஒருவரின் கல்லூரி வளாகத்தில் கிணறு தோண்டுவதாக கூறிக் கொண்டு, குவாரிக்கு இணையாக கற்களை வெட்டி எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இங்கு வெடிகளை வைத்து பாறைகளை தகர்க்கும் போது, சிதறும் கற்கள் அருகே உள்ள வீடுகள் மீது விழுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

கல் குவாரியோ…. கிணறோ…… இப்படி வெட்டப்படும் இடத்தில் இருந்து கற்கள் சிதறுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னத்தூர் கிராமத்தின் அருகே அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் எம்ஜிஆர் கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான தம்பிதுரைக்கு சொந்தமாக இந்தக் கல்லூரிகளின் வளாகத்தில்தான் எந்நேரமும் வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் தண்ணீருக்காக ஒப்பந்ததாரர் மூலம் கிணறு வெட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வெட்டும் போது அதிக அளவிலான மருந்துகளை நிரப்பிய வெடிகள் மூலம் பாறைகள் தகர்ப்படுகின்றன்.

அந்த பாறைகள் வெடிக்கும் போது அதில் இருந்து சிதறும், பெரிய கற்கள் அருகே உள்ள விவசாய நிலங்களில் சரமாரியாக விழுகின்றன. இதனால் பயிர்கள் சேதமடைகின்றன. கற்கள் வெடி வைத்து தகர்ப்படுவதால் வீடுகளிலும் விரிசல் ஏற்படலாம் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாய வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் உயிர் பயத்தில் விவசாயிகள் வேலைக்கே வருவதில்லை என்றும் கூறும் அப்பகுதி மக்கள், வீடுகள் எந்நேரமும் இடிந்து விழலாம் என்றும் பதற்றத்துடன் கூறுகின்றனர்.

வெடி வைத்து தகர்க்கப்படும் கற்கள் வீடுகளின் மீது விழுவதால் அப்பகுதி சிறுவர், சிறுமிகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எந்த நேரத்தில் வீடுகளின் மீது கல் விழுமோ என்ற அச்சத்தில் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர், அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் தம்பிதுரைக்கு சொந்தமான கல்லூரியில் கிணறு வெட்டுவதாகக் கூறுகிறார்கள்…. ஆனால் வெட்டுவது கிணறு அல்ல… குவாரிதான் வெட்டுகிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாரிக்கு வைக்கும் வெடிமருந்து அளவை விட 10 மடங்கு அதிகமாக வைத்து வெடிக்கச் செய்கிறார்கள் எனவும் இதனால் அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குமுறல் எழுந்துள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும் பொதுமக்கள் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

Tags: MGR Arts College and Medical CollegeChennathur villagekrishnagiriformer ministerAthiyaman Engineering College
ShareTweetSendShare
Previous Post

நடப்பாண்டில் 100 வெற்றிகரமான Startups நிறுவனங்களை உருவாக்குவோம் – சென்னை ஐஐடி இயக்குநர் நம்பிக்கை!

Next Post

ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies