முன்னாள் அமைச்சர் கல்லூரி வளாகத்தில் வெடித்து சிதறும் கற்கள் - உயிர் பயத்தில் மக்கள்!
Aug 21, 2025, 05:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முன்னாள் அமைச்சர் கல்லூரி வளாகத்தில் வெடித்து சிதறும் கற்கள் – உயிர் பயத்தில் மக்கள்!

Web Desk by Web Desk
Sep 27, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முன்னாள் அமைச்சர் ஒருவரின் கல்லூரி வளாகத்தில் கிணறு தோண்டுவதாக கூறிக் கொண்டு, குவாரிக்கு இணையாக கற்களை வெட்டி எடுப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலும், இங்கு வெடிகளை வைத்து பாறைகளை தகர்க்கும் போது, சிதறும் கற்கள் அருகே உள்ள வீடுகள் மீது விழுவதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

கல் குவாரியோ…. கிணறோ…… இப்படி வெட்டப்படும் இடத்தில் இருந்து கற்கள் சிதறுவது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னத்தூர் கிராமத்தின் அருகே அதியமான் பொறியியல் கல்லூரி மற்றும் எம்ஜிஆர் கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதிமுக முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் மூத்த தலைவருமான தம்பிதுரைக்கு சொந்தமாக இந்தக் கல்லூரிகளின் வளாகத்தில்தான் எந்நேரமும் வெடிச்சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கிறது.

கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் தண்ணீருக்காக ஒப்பந்ததாரர் மூலம் கிணறு வெட்டப்படுவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு வெட்டும் போது அதிக அளவிலான மருந்துகளை நிரப்பிய வெடிகள் மூலம் பாறைகள் தகர்ப்படுகின்றன்.

அந்த பாறைகள் வெடிக்கும் போது அதில் இருந்து சிதறும், பெரிய கற்கள் அருகே உள்ள விவசாய நிலங்களில் சரமாரியாக விழுகின்றன. இதனால் பயிர்கள் சேதமடைகின்றன. கற்கள் வெடி வைத்து தகர்ப்படுவதால் வீடுகளிலும் விரிசல் ஏற்படலாம் என்று பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். விவசாய வேலைகள் பாதிக்கப்படுவதாகவும் உயிர் பயத்தில் விவசாயிகள் வேலைக்கே வருவதில்லை என்றும் கூறும் அப்பகுதி மக்கள், வீடுகள் எந்நேரமும் இடிந்து விழலாம் என்றும் பதற்றத்துடன் கூறுகின்றனர்.

வெடி வைத்து தகர்க்கப்படும் கற்கள் வீடுகளின் மீது விழுவதால் அப்பகுதி சிறுவர், சிறுமிகளின் கல்வியும் பாதிக்கப்படுகிறது. எந்த நேரத்தில் வீடுகளின் மீது கல் விழுமோ என்ற அச்சத்தில் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதுகுறித்து காவல்துறையினர், அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் தம்பிதுரைக்கு சொந்தமான கல்லூரியில் கிணறு வெட்டுவதாகக் கூறுகிறார்கள்…. ஆனால் வெட்டுவது கிணறு அல்ல… குவாரிதான் வெட்டுகிறார்கள் எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குவாரிக்கு வைக்கும் வெடிமருந்து அளவை விட 10 மடங்கு அதிகமாக வைத்து வெடிக்கச் செய்கிறார்கள் எனவும் இதனால் அப்பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குமுறல் எழுந்துள்ளது.

மாவட்ட ஆட்சியரிடம் இதுபற்றி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறும் பொதுமக்கள் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படுவதற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.

Tags: krishnagiriformer ministerAthiyaman Engineering CollegeMGR Arts College and Medical CollegeChennathur village
ShareTweetSendShare
Previous Post

நடப்பாண்டில் 100 வெற்றிகரமான Startups நிறுவனங்களை உருவாக்குவோம் – சென்னை ஐஐடி இயக்குநர் நம்பிக்கை!

Next Post

ராகுல் காந்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அர்த்தம் தெரியுமா? மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேள்வி!

Related News

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

ஆப்கானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த influencers-ஐ கொண்டு தாலிபான்கள் விளம்பரம் : ஆபத்தானது என எச்சரிக்கை!

இலங்கை ​யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழா கோலாகலம்!

எதிர்க்கட்சிகள் அமளி – மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைப்பு!

குடியரசுத் துணை தலைவர் தேர்தல் – சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!

நீலகிரி அருகே கடன் தொகையை திருப்பி செலுத்தாதவர் மீது தாக்குதல் – தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் கைது!

கரூரில் ரயில்வே தண்டவாளம் அருகே கல்லூரி மாணவர் உடல் எரிந்த நிலையில் மீட்பு!

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இருவர் படுகாயம்!

கர்நாடகாவில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி முதலமைச்சருக்கு Z பிரிவு பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies