வேளாண் துறையின் மீது நேசம் கொண்ட பாப்பம்மாள் மறைவு வேதனை அளிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ‘பத்மஶ்ரீ’ பாப்பம்மாள் பாட்டி அவர்கள், உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தி மிகுந்த மனவருத்தம் அளிக்கிறது.
தனது 109-வது வயதில் இயற்கை எய்தியுள்ள பாட்டி பாப்பம்மாள் கடைசி காலம் வரை வேளாண் துறையின் மீது தான் கொண்டிருந்த நேசத்தால், களத்தில் இறங்கி விவசாயம் செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
இதற்காக, தேசத்தின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஶ்ரீ’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இன்று இயற்கை எய்திய, ‘பத்மஶ்ரீ’ பாப்பம்மாள் பாட்டி அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, அம்மாவின் ஆன்மா சாந்தியடைய கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.