லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தலைமையகத்தை இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் மூலம் தகர்த்தது.
ஐ.நா. பொது அவைக் கூட்டத்தில் இஸ்ரேலில் அமைதி திரும்பும் வரை போரைக் கைவிடமாட்டோம் என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றிய சில மணி நேரத்தில், ஹிஸ்புல்லா தலைமையகம் தகர்க்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் நான்கு மாடி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. தாக்குதலின் பாதிப்பு 30 கிலோமீட்டர் சுற்றளவில் உணரப்பட்டதாக தகவல் வெளியானது.
, இந்தத் தாக்குதலில் ஹிஸ்புல்லாக்களின் தலைவர் ஹாசன் நஸ்ரல்லா கொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது. இந்த நிலையில், இஸ்ரேலுக்கு பதிலடியாக அந்நாட்டின் வடக்குப் பகுதியைக் குறிவைத்து ஹிஸ்புல்லாக்கள் 65 ராக்கெட்டுகளை ஏவியதாக தகவல் வெளியாகியுள்ளது.