இந்தியாவிடமிருந்து வந்தே பாரத் ரயில்களை வாங்க சிலி, கனடா, மலேசியா உள்ளிட்ட நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன.
வந்தே பாரத் ரயில் பெட்டியை போல பல்வேறு வசதிகளுடன் வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் ரயில்கள், 160 கோடி முதல் 180 கோடி ரூபாய் வரை விற்பனையாகின்றன.
ஆனால், இந்தியாவில் தயாராகும் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் 120 கோடி முதல் 130 கோடி ரூபாய் விலையிலேயே கிடைப்பதால், நம்மிடம் இருந்து அவற்றை வாங்க வெளிநாடுகள் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தயாராகும் வந்தே பாரத் ரயில் முதல் நூறு கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 நொடிகளில் எட்டிவிடும்.
அதேசமயம், ஜப்பானின் புல்லட் ரயில் நூறு கிலோமீட்டர் வேகத்தை எட்ட 54 நொடிகள் வரை எடுத்துக் கொள்வதால், வேகத்திலும் வெளிநாடுகளை வந்தே பாரத் ரயில் வெகுவாக ஈர்த்திருக்கிறது.
விமானம் ஏற்படுத்தும் ஒலிமாசை காட்டிலும் நூறு மடங்கு குறைவாக ஒலி மாசு ஏற்படுத்துவதும், குறைவான எரிசக்தி பயன்பாடும் வந்தே பாரத் ரயிலை வெளிநாடுகள் விரும்புவதற்கு காரணம் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.