கோவையின் பல்வேறு பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என, போலீசார் சோதனை நடத்தினர்.
கோவையில் உள்ள பீளமேடு, சரவணம்பட்டி, குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் அறை எடுத்து தங்கி பயின்று வருகின்றனர். இங்கு பயிலும் மாணவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி வருவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், கல்லூரி மாணவர்கள் தங்கியுள்ள அறைகளில் போலீசார் தீடீர் சோதனை நடத்தினர். அப்போது போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளதா என தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கடந்த மாதம் சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்களின் அறையில் நடத்தப்பட்ட சோதனையில், போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.