கோவையில் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக சுரங்கத்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட வனப்பகுதிகளில் சீல் வைக்கப்பட்ட செங்கற்சூளைகள் சட்டவிரோதமாக செயல்படுவதாகவும், செம்மண் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது ஆஜரான மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பிறகும் செம்மண் கொள்ளை தொடர்ந்து நடைபெறுவதாக குற்றம் சாட்டப்பட்டது.
பின்னர் தமிழக சுரங்கத்துறை சார்பில் செங்கல் சூளைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற் சூளைகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஒவ்வொரு துறை மீதும் குறைகூறி வருவதாக தெரிவித்து வழக்கின் விசாரணையை அக்டோபர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.