ஐபிஎல் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு அவர் விளையாட தடை விதிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.
2025 முதல் 2027ஆம் ஆண்டு வரை நடைபெறும் ஐபிஎல் தொடருக்கான விதிமுறைகளை ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் அணிகளுக்கு அதிகபட்ச ஏலத்தொகையாக 120 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளளது.
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் தங்கள் அணியில் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைக்கலாம் என்றும், அதில் அதிகபட்சமாக 5 CAPPED வீரர்களும், 2 UNCAPPED வீரர்களும் இடம்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் தொடரில் பங்கேற்காவிட்டால் 2 சீசன்களுக்கு அவர்கள் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ள ஐபிஎல் நிர்வாகம், இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் 2027ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.