புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, நாசர் கோவி. செழியன் ஆகியோர் இன்று முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர்.
தமிழக அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சர்கள் குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை கடிதம், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து அமைச்சரவை மாற்றத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று இரவு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. அப்போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட ராஜேந்திரன், செந்தில் பாலாஜி, நாசர் கோவி. செழியன் ஆகியோர் முறைப்படி பதவியேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு ஆளுநர் ஆர்..என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிகழச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.