மலேசியாவில் நடைபெற்ற உலக சைவ நன்னெறி மாநாட்டில் தருமபுரம் ஆதீனம் பங்கேற்று சிறப்பித்தார்.
மலேசிய நாட்டில் பத்துமலை முருகன் கோயிலில் உலக சைவ நன்னெறி மாநாடு நேற்று மாலை நடைபெற்றது. இதனை தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார்.
அப்போது மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ சரவணன் எம்.பி.க்கு மக்கள் சேவைக்கான விருதினை தருமபுரம் ஆதீனம் வழங்கினார். இதில் மலேசிய தமிழ் அறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.