ஏர்-இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான்பூச்சி இருந்ததாக குற்றஞ்சாட்டி பயணி ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியைச் சேர்ந்த சுயிஷா சாவந்த் என்பவர், தனது 2 வயது குழந்தையுடன் அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு ஏர்-இந்தியா விமானத்தில் சென்றார். விமான பயணிகளுக்கு ஆம்லெட்டுடன் கூடிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவை சுயிஷா தனது குழந்தைக்கு ஊட்டியதுடன், தானும் சாப்பிட்டுள்ளார்.
அப்போது ஆம்லெட்டில் கரப்பான் பூச்சி ஒன்று, இறந்த நிலையில் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும், அதனை செல்போனிலும் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனிடையே இந்த சம்பவத்திற்காக ஏர்-இந்தியா நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.