அற்புதமான வானியல் நிகழ்வு! : பூமிக்கு வரும் இரண்டாம் நிலவு!
Jul 2, 2025, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அற்புதமான வானியல் நிகழ்வு! : பூமிக்கு வரும் இரண்டாம் நிலவு!

Web Desk by Web Desk
Oct 1, 2024, 08:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்னும் இரண்டு மாதங்களுக்கு அற்புதமான வானியல் நிகழ்வு நடக்க இருக்கிறது. பூமிக்கு இரண்டாவது நிலவு வரப்போகிறது. பூமியின் தற்காலிக நிலவு பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

35,000-க்கும் மேற்பட்ட விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் போன்றவை பூமிக்கு அருகே சுற்றி வருகின்றன என அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’ கண்டுள்ளது. அவற்றின் சுற்றுப்பாதை மற்றும் பூமிக்கு அருகில் அவை வரும் காலம் ஆகியவற்றை துல்லியமாக கணித்து வெளியிட்டு வருகிறது, நாசாவின் ‘ஆஸ்டிராய்ட் டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம்’ எனும் வானியல் அமைப்பு.

அதன்படி சென்ற ஆகஸ்ட் 7ம் தேதி, 37 அடி விட்டமுடைய அர்ஜுனா விண்கல் குடும்பத்தைச் சேர்ந்த ‘2024 பி.டி.5’ என்ற விண்கல்லை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

எப்போதுமே, பூமி தன் அருகே சுற்றி வரும் விண்கற்கள், சிறுகோள் போன்றவற்றை ஈர்த்து, அவற்றை தற்காலிகமாக தனக்கான சிறிய நிலவாக மாற்றுவது அறிவியல் வழக்கம்.

அதன்படி ‘2024 பி.டி.5’ விண்கல் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்பட்டு, வரும் செப்டம்பர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை, பூமிக்கு 34 லட்சம் கிலோமீட்டர் துாரத்தில், மணிக்கு 3540 கிலோமீட்டர் வேகத்தில் பூமியின் இரண்டாவது நிலவாக பூமியை சுற்றி வரும்.

பின் பூமியின் ஈர்ப்பு விசையில் இருந்து விலகி, மீண்டும் தன் ‘அர்ஜுனா’ விண்கல் குடும்ப சுற்றுப் பாதைக்கே சென்று விடும் என்று என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமிக்கு தற்காலிக மினி நிலவாக வரும் இந்த விண்கல்லை, வெறும் கண்களாலோ அல்லது சாதாரண தொலைநோக்கிகள் மூலமாகவோ பார்க்க முடியாது என்றாலும், தொழில்முறை தொலைநோக்கிகள் மூலம் பார்க்கக் கூடிய இந்த விண்கல், நட்சத்திரங்களுக்கு இடையே மிக வேகமாக நகர்ந்து செல்வதை ஆன்லைனில் பார்க்க முடியும் என்று வானியலாளர் டாக்டர் ஜெனிபர் மில்லார்ட்கூறியுள்ளார்.

2024 PT5, வரும் நவம்பர் 25 ஆம் தேதி பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறினாலும், 2055 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மீண்டும் சில நாட்களுக்குப் பூமியின் ‘இரண்டாவது நிலவாக’ திரும்பும் என்றும், அதன் பின்னர் 2084ம் ஆண்டின் தொடக்கத்தில், மீண்டும் சில வாரங்களுக்குப் பூமியின் ‘இரண்டாவது நிலவாக’ திரும்பும் என்று வானியலாளர்கள் கணித்துள்ளனர்.

மிக சிறிய அளவிலான இந்த தற்காலிக நிலவு, பூமியில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதால் பயப்பட தேவையில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

எந்நேரமும் சுறுசுறுப்பாக உள்ள சூரிய குடும்பத்தில், இந்த சிறுகோள், இந்த ஆண்டு தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், கண்டுபிடிக்காதவை இன்னும் எவ்வளவோ உள்ளன என்றும், தொடர்ந்து கண்காணித்து அனைத்தையும் கண்டுபிடிக்கும் முக்கியத்துவத்தை இந்த தற்காலிக நிலவு எடுத்துக்காட்டுகிறது என்று வானியலாளர் டாக்டர் ஜெனிபர் மில்லார்ட் தெரிவித்திருக்கிறார்.

Tags: Amazing astronomical phenomenon! : The second moon coming to Earth!
ShareTweetSendShare
Previous Post

பெண் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது! – குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு

Next Post

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

Related News

சென்னையில் பாஜக ஆர்பாட்டம் – நாராயணன் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்!

திருச்செந்தூர் முருகன் கோயில் யாகசாலை பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு நேரத்தை மாற்றக்கோரிய மனு தள்ளுபடி!

பரமக்குடி – ராமநாதபுரம் இடையே 4 வழிச்சாலை – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட சிவகங்கை எஸ்.பி – புதிய காவல்துறை கண்காணிப்பாளராக சந்தீஷ் பொறுப்பேற்பு!

பிரதமர் மோடி 8 நாட்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் – கானா, அர்ஜெண்டினா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

ஏவுகணை மூலம் இலக்கை அழிக்கும் பங்கர் பஸ்டர் குண்டு – சிறப்பு கட்டுரை!

RAW புதிய தலைவர் : நாட்டின் பாதுகாப்புக்கு புதிய நம்பிக்கை!

“இந்த வாழ்க்கையை இனி வாழ முடியாதுப்பா….” – ரிதன்யாவிற்கு நடந்தது என்ன?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies