கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் முன்னுதித்த நங்கை அம்மன் திருவனந்தபுரம் புறப்படும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க ஒவ்வொரு ஆண்டும் குமரி மாவட்டத்தில் உள்ள சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதன் ஒரு பகுதியாக சுசீந்திரத்தில் இருந்து முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழா வரும் 3ம் தேதி தொடங்கவுள்ளது.
இதனிடையே, வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் சரஸ்வதி அம்மன் புறப்பாடு நிகழ்வுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவனந்தபுரத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்த நவராத்திரி விழாவில் பங்கேற்ற பின் சுவாமி சிலைகள் மீண்டும் கன்னியாகுமரி வந்தடையும்.