'அடேங்கப்பா' கணவர் நீச்சல் உடையில் குளிக்க தனித்தீவு! உலகையே கவனிக்க வைத்த காதல் பரிசு!
Jul 7, 2025, 07:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

‘அடேங்கப்பா’ கணவர் நீச்சல் உடையில் குளிக்க தனித்தீவு! உலகையே கவனிக்க வைத்த காதல் பரிசு!

Web Desk by Web Desk
Sep 30, 2024, 03:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கு அளித்த பரிசு, ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. யார் அவர், அப்படி என்ன பரிசை வழங்கினார் என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்…!

பொதுவாக மனைவியிடம் காதலை வெளிப்படுத்த கணவன்மார்கள் என்னென்ன பரிசுகளை வாங்கி தருவார்கள் என்று பார்த்தால், மல்லிகைப்பூ, ரோஜா, விலை உயர்ந்த உடைகள் தொடங்கி, தங்க நகை, வைர மோதிரம் என அந்த பட்டியல் நீளும்.

ஆனால், Out Of Box-ல் யோசித்த துபாயை சேர்ந்த கணவர் ஒருவர், தனது மனைவிக்கு தனித்தீவு ஒன்றையே வாங்கி கொடுத்து, அவரது மனைவியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

துபாயில் மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தை சேர்ந்தவர் ஜமால் அல் நடாக். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த சௌதி என்பவரை காதலித்து வந்தார். அவர்கள் இருவருக்கும் 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

ஜமால் அல் நடாக் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். ஆனால், குடும்ப தொழிலை பார்த்துக்கொள்வது, தனது நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்வது எல்லாம் சௌதி அல் நடாக்கிற்கு இரண்டாம் பட்ச வேலைதான். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதும், அதனை காண்பித்து தனது மனைவியை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதும்தான் அவரது முழுநேர வேலை.

தனது மனைவியை surprise செய்ய பல கோடி ரூபாய்களை அவர் செலவிட்டுள்ளார். ஒருமுறை தனது மனைவிக்காக மோதிரம் ஒன்றை வாங்க வேண்டும் என்று அவர் முடிவெடுத்தார். அந்த முடிவு அவரது நண்பர்கள் அனைவரையும் வாய்பிளக்க செய்தது. காரணம், அந்த மோதிரத்தின் விலை, ஒரு மில்லியன் டாலர். இந்திய மதிப்பில் கூறவேண்டும் என்றால், சுமார் 8 கோடி ரூபாய்.

மற்றொரு முறை அரிய கலைப்படைப்புளை வாங்கலாம் என ஜமால் அல் நடாக் நினைத்தார். அதற்காக அவர் ஒதுக்கிய தொகை, 17 கோடி ரூபாய்.

இப்படி, வளைத்து வளைத்து பொருட்களை ஷாப்பிங் செய்வதிலும், தனது மனைவியை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதிலும் அவருக்கு அலாதி இன்பம்.

கோடி ரூபாய் என்பதெல்லாம் பெரும்பாலானோருக்கு வாழ்நாள் உழைப்பு. ஆனால், ஜமால் அல் நடாக்கிற்கு அந்த தொகை வெறும் pocket money-தான்.

தொழிலதிபர் ஜமால் அல் நடாக், அண்மையில் தனது மனைவிக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த பரிசை பார்த்த பெரும்பாலான கணவர்கள் நெஞ்சை பிடித்து விட்டனர். காரணம், ஜமால் அல் நடாக் தனது மனைவி குளிப்பதற்காக தனித்தீவு ஒன்றையே வாங்கிக்கொடுத்துள்ளார். இந்த தீவின் மதிப்பு இந்திய ரூபாயில் 418 கோடி ரூபாய். தனது மனைவி பிகினி உடை அணிந்தபடி தனிமையில் ஆனந்தமாக குளிக்க ஏதுவாக இந்த தீவை வாங்கியுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த தீவு எங்கே உள்ளது என்ற தகவலை சௌதி அல் நடாக் வெளியிடவில்லை. இந்த தீவு தொடர்பாக அவரது மனைவி வெளியிட்ட வீடியோ, இன்ஸ்டாவில் லட்சக்கணக்கில் பார்வைகளையும், லைக்குகளையும் பெற்றுள்ளது.

ஜமால் அல் நடாக்கின் இந்த செயலை பலர் விமர்சித்தும் வருகின்றனர். “காதலை வெளிப்படுத்த பலருக்கு ஒற்றை ரோஜாவே போதும். ஆனால், சிலருக்கு மட்டும் காதலை நிரூபிக்க தனித்தீவு தேவைப்படுகிறது.” என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மேலும், “பெண்கள் பாதுகாப்பாக குளிக்க முடியாத நிலையில்தான் துபாய் கடற்கரைகள் உள்ளதா?. தனித்தீவில் குளித்தால் மட்டும்தான் அங்கு பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?” எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

எது எப்படி இருந்தாலும், மனைவி குளிக்க தனித்தீவு வாங்கியதன் மூலம் வரலாற்றிலும், பல பெண்களின் மனதிலும் இடம்படித்து விட்டார் ஜமால் அல் நடாக். காதலை வெளிப்படுத்த ஒரு மிகப்பெரிய உயரத்தையும் அவர் நிர்ணயித்து விட்டார். அந்த உயரத்தை தாண்ட போகும் அடுத்த பணக்கார கணவர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags: 'Adengappa' husband swims in a separate island! A gift of love that made the world pay attention!
ShareTweetSendShare
Previous Post

கோவில்பட்டி கதிரேசன் மலை பகுதியில் கனிம வளங்கள் திருடப்படுவதாக புகார்!

Next Post

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி!

Related News

திமுகவிற்கு எதிரணியில் தமிழக மக்கள் உள்ளனர் – தமிழிசை சௌந்தரராஜன்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் – பிரிக்ஸ் நாடுகள் கண்டனம்!

பயங்கரவாதத்தை முறியடிப்பதில் பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி அழைப்பு!

வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் – ஆரத்தழுவி வரவேற்ற பிரேசில் அதிபர்!

சகல சௌபாக்கியங்கள் அருளும் செந்தூர் முருகன் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்!

வார விடுமுறை – ஏற்காட்டிற்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்!

தலாய் லாமா பிறந்த நாள் கொண்டாட்டம் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்பு!

இபிஎஸ் சுற்றுப்பயணத்திற்கு பாஜக முழு ஆதரவு – நயினார் நாகேந்திரன்

பாஜகவில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் – வானதி சீனிவாசன்

தலாய் லாமா பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

உதகை அருகே சாலையோர பள்ளத்தில் உள்ள வீட்டின் மீது கவிழந்த கார்!

திருப்பத்தூரில் குழந்தை உள்ளிட்ட 8 பேரை கடித்த வெறிநாய் – பொதுமக்கள் அச்சம்!

அலங்காநல்லூர் அருகே சகோதரர்கள் மீது தாக்கும் நடத்திய போலீஸ் – வெளியானது வீடியோ!

பரதநாட்டிய கலைஞர் லித்திகா ஸ்ரீயின் பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி – அண்ணாமலை பங்கேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies