விருதுநகரில் பால் வளத்துறை துணை ஆய்வாளரைக் கண்டித்து பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட பால்வளத்துறை துணை ஆய்வாளர் சம்பத்தை பால் உற்பத்தியாளர் நலச்சங்க நிர்வாகிகள் சந்திக்க சென்றனர். அப்போது நிர்வாகிகள் அனைவரும் தங்களது செல்போன்களை கேரி பையில் போட வேண்டும் என துணை ஆய்வாளர் கட்டாயப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.