திருச்சியில் தனியார் நிதி நிறுவனத்தை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணச்சநல்லூரை சேர்ந்த விவசாயிகளான ஜோதி, காத்தான் தம்பதியினர், தங்களது ஜே.சி.பி இயந்திரத்தை அடகு வைத்து தனியார் நிதி நிறுவனத்திடம் கடன் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், வாங்கிய கடனுக்கு மேலாக வட்டி கட்டிய பிறகும் ஜே.சி.பி. இயந்திரத்தை தராமல் மேலும் ஒரு லட்சம் ரூபாய் கட்டுமாறு விவசாய தம்பதியை நிதி நிறுவனம் மிரட்டியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.