வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் வக்ஃபு வாரிய மசோதா நிறைவேறும் என மத்திய அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குர்கானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், வக்ஃபு வாரியத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக இந்த மசோதா கொண்டு வரப்படுவதாக கூறினார்.
ஏற்கெனவே கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், வக்ஃபு வாரிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட போதிலும் ஒருமித்த முடிவு எடுக்கப்படாததால், நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.