இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் உரிய விலை கொடுத்தே ஆக வேண்டும் - பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசம்!
Mar 15, 2026, 02:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு ஈரான் உரிய விலை கொடுத்தே ஆக வேண்டும் – பெஞ்சமின் நெதன்யாகு ஆவேசம்!

Murugesan M by Murugesan M
Oct 2, 2024, 10:45 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் எனவும் அந்நாட்டின் பிரதமர் நெதன்யாகு சூளுரை விடுத்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காசா நகரை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஓராண்டாக போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஈரானின் ஆதரவு பெற்ற லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினரும், ஏமன் நாட்டை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இது தவிர சிரியாவின் எல்லையோர பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஈரான் ஆதரவு ஆயுத குழுக்களும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை இஸ்ரேல் குண்டு வீசி தாக்கி கொன்ற நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. 400க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்கியதில், டெல் அவிவ் நகரில் 30 பேர் பலியான நிலையில், பலர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் தாக்குதலை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரான் மிகப்பெரிய தவறை செய்துவிட்டதாகவும், இதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் எனவும் சூளுரைத்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல் தோல்வியடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், நம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான நமது உறுதியையும், எதிரிகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கான நமது உறுதியையும் ஈரானின் ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இஸ்ரேலில் பதற்றமான சூழல் உருவாகியுள்ள நிலையில், இஸ்ரேலில் வசிக்கும் இந்தியா்கள் விழிப்புடனும், பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து, பாதுகாப்பான இடங்களிலேயே தங்கியிருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதுடன் இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

Tags: Prime Minister NetanyahuIran has made a huge mistakemissile attack on Israel
ShareTweetSendShare
Previous Post

தமிழகத்தின் கல்வி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் கர்மவீரர் காமராஜர் அண்ணாமலை புகழாரம்!

Next Post

பாம்பன் செங்குத்து தூக்குப் பாலம் சோதனை வெற்றி – பட்டாசு வெடித்து கொண்டாடிய ஊழியர்கள்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies