வீர சாவா்க்கா் குறித்து, அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என நாசிக் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு செய்தியாளர் சந்திப்பின் போது மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, வீர சாவா்க்கரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான கருத்துகளை தெரிவித்தாா்.
இது தொடர்பாக நாசிக் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், ராகுல்காந்தி அல்லது அவருடைய பிரதிநிதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நீதிமன்றம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.